"மானத்தை காக்க முரண்டு பிடித்த நடிகை..!" - திரைபட வாய்பை காலி செய்த வாரிசு நடிகர்..!

 

இந்த நடிகையைப் பார்க்கும் போது நம்ம வீட்டுப் பெண் போல தோற்றத்தில் காட்சியளிப்பார். குடும்பப் பாங்காக இருக்கும் இந்த நடிகை முதல் படத்திலேயே அனைவரது பாராட்டுதல்களையும் பெற்று தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். 

மேலும் துரு, துரு முகத்தோடு இவர் நடிக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் ரசித்தனர். இதைத்தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களோடு நடிக்கக்கூடிய வாய்ப்பினை இவர் பெறக்கூடிய வகையில் வளர்ந்தார். 

எனினும் திடீர் என்று இவருக்கு பட வாய்ப்புகள் குறைய படங்களில் நடிப்பதையும் தவிர்த்தார். ஒரு காலகட்டத்தில் இவர் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்க தோன்றக்கூடிய வகையில் திரைப்படங்களில் தலை காட்ட வில்லை. 

மேலும் சினிமாவில் புதுப்புது நடிகைகளின் வரத்து அதிகரித்து காரணத்தால் ரசிகர்களும் இவரை மறந்து போனார்கள் என்றே கூற வேண்டும். இதனை அடுத்து இந்த நடிகை சினிமாவில் கவனத்தை செலுத்தாமல் மதுவுக்கு அடிமையாகி விட்டார் என்று ஒரு சிலரும், திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டார்கள். 

ஆனால் உண்மையில் எந்த நடிகையின் வாய்ப்பு கைநழுவி போக காரணத்தைத் தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அப்படி வாய்ப்பில்லாமல் முடங்கி போனதற்கு காரணம் ஒரு மாஸ் ஹீரோ என்றால் உங்களுக்கு எப்படி என்று தோன்றும். இந்த மாஸ் ஹீரோ படத்தில் நடிப்பதற்காக இந்த நடிகையை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். 

வழக்கம் போல குடும்பப் பாங்கான இந்த நடிகையை அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இந்த நடிகையோ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததோடு மட்டுமல்லாமல், இந்த வாய்ப்பு எனக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை என்று அதற்கு சம்மதிக்காமல் முரண்டு பிடித்து இருக்கிறார். 

இதனால் மிகுந்த கோபம் அடைந்த அந்த நடிகர் வேறொரு நடிகையை அந்த படத்தில் நடிக்க புக் செய்து விட்டார். அது மட்டுமல்லாமல் தன் இச்சைக்கு இணங்க மறுத்த அந்த நடிகையின் மார்க்கெட்டை காலி செய்ய துணிந்து அதற்கு உரிய வேலைகளில் ஈடுபட்டார். 

மேலும் அந்த சிறந்த நடிகைக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு எல்லாம் தட்டி விட்டு, எந்த வாய்ப்பும் கிடைக்காத படி பார்த்துக் கொண்டு அந்த நடிகையின் திரை வாழ்க்கையை சின்னா பின்னப் படுத்தினார். 

இதனை அடுத்து வாய்ப்புக்கள் பறி போக அடுத்ததாக ரீ என்ட்ரி கொடுக்க தயாராக இந்த நடிகை இருக்கிறார். இவர் மீண்டும் என்ட்ரி கொடுத்தால் நிச்சயம் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் எனும் நம்பிக்கையில் அந்த நடிகை காத்திருக்கிறார். 

எனவே இந்த நடிகைக்கு விரைவில் நல்ல வாய்ப்பு கிடைத்து திரை உலகில் மீண்டும் நடிக்க நடிக்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது.