என் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர்.. ஆனால்..! - ரகசியம் உடைத்த ரோஜா..!

 


தமிழ் திரை உலகில் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ரோஜா 90 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர்.

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் அதிக அளவு ஆர்வம் காட்டிய இவர் தற்போது அரசியலில் நுழைந்து முழு நேர அரசியல்வாதியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அமைச்சராகவும் திகழ்கிறார். 

இதனை அடுத்து அண்மையில் இவர் பற்றி பல வதந்திகள் கிளம்பிய போதும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மிகவும் போல்டாக செயல்பட்டு வரும் ரோஜா அண்மையில் ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். இந்த பேட்டியில் இவர் எப்படி தன் காதல் கணவனை கைபிடிக்க பெற்றோர்கள் சம்மதம் செய்தார்கள். 

அவர் வேற்று ஜாதியை சேர்ந்த போதும் எப்படி வீட்டில் ஒத்துக் கொண்டு திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்கள் என்பது பற்றிய பேட்டி தான். இவர் செம்பருத்தி படத்தில் நடிக்கும் போது சுத்தமாக தமிழ் எனக்கு தெரியாது. அப்போது செல்வா என்னிடம் பேச மிகவும் பேச வெட்கப்படுவார். 

அத்தோடு கூச்ச சுவாபம் கொண்டவர். அந்த சமயத்தில் தான் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. மேலும் செல்வா என்னுடைய அப்பா அம்மாவிடம் வந்து அவருடைய காதலை சொன்னார். என்னுடைய பெரிய அண்ணா தான் எங்களுடைய வீட்டில் எல்லா முடிவுகளையும் எடுப்பார். 

அவரிடம் இந்த விஷயத்தை சொன்ன உடனேயே அவரும் ஒப்புக்கொண்டார். இதற்குக் காரணம் செல்வாவின் அருமையான கேரக்டர்தான் திரைத்துறையில் இருந்து கொண்டு இப்படி இருக்கிறாரே? என்று எனது வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம்.

மேலும் முறைப்படி வந்து பெண் கேட்டதின் காரணத்தால் அவர் மேல் அதீத நம்பிக்கை ஏற்பட்டது. எனவே தான் வேறு ஜாதியாக இருந்தால் கூட பரவாயில்லை என்று திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். மிகவும் சந்தோஷத்தோடு அவர்கள் எங்கள் திருமணத்தை ஒப்பு கொண்டதற்கு காரணம் இது தான் என்ற அந்த உண்மையை தற்போது உடைத்திருக்கிறார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து எங்களுக்கு மேலான ஆதரவை கொடுங்கள்.