அடடே..! பாலியல் புகாருக்கு ஆளானவரா பிக் பாஸ் போட்டியாளர் மாயா..?

 


திரைத் துறையைச் சேர்ந்தவர்களை போலவே டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்களும் தற்போது பாலியல் புகார்களுக்கு ஆளாகி வருவது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 அந்த வகையில் அண்மையில் வெளிவந்து உலக நாயகனின் நடிப்புத் திறனை மீண்டும் பறைசாற்றிய விக்ரம் படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோலை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை மாயா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம். 

 இவர் தற்போது விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்று வரும் நிலையில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவிட்டது என கூறலாம். 

இந்தப் பாலியல் குற்றச்சாட்டானது 2018 ஆம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகின்ற வேலையில் போட்டியில் பங்கேற்று இரண்டு நாட்கள் முடிந்த நிலையில் மாயாவின் பாலியல் புகார்கள் பகிரப்பட்டு வருகிறது. 

இந்த செய்தியானது தனியார் ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியான செய்தியாகும். இந்த செய்தியில் அனன்யா ராம் பிரசாத் என்பவர் மாயா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். 

 மேலும் இது தொடர்பான கருத்துக்களை அவர் பேஸ்புக்கில் வெளியிட அந்தப் பதிவும் செய்தியில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் நாடகக் கலைஞரான மாயாவை கடந்த 2016 இல் சந்தித்ததாகவும் அப்போது அவருக்கு 18 வயது எனில் என்றும் மாயாவுக்கு 25 வயதில் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். 

 தனக்கு பயிற்சியாளராக இருந்த மாயா ஒரு காலகட்டத்தில் தன்னை முழுமையாக கட்டுப்படுத்தி அவர் அவரைக் கொண்டு வந்து விட்டதாகவும் பள்ளி பருவத்தில் இருந்து என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களையும் பிரித்து விட்டார் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் தான் மற்றவரிடம் பேசக்கூடாது என்று அடிக்கடி கூறுவதோடு மட்டுமல்லாமல் என்னை பற்றி எனது நண்பர்களிடமே புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவதூறு செய்திகளையும் கூறி இருக்கிறார். 

இங்கு கட்டுப்பாட்டுக்குள் அவரை முழுமையாக கொண்டு வந்தார் என்ற வார்த்தையானது மோசமான பாலியல் உறவு கொள் சிக்க வைக்கப்பட்டேன் என்ற குறிப்பை உடன் கூறி இருப்பதால் மாயாவின் மீது இட்டகைய பாலியல் குற்றச்சாட்டு இருப்பது உண்மையா என்ற கேள்வியை ஏற்படுத்தி விட்டது. 

 இதனை அடுத்து மாயா கிருஷ்ணன் இதற்கு விளக்கம் அறிவித்து இருக்கிறார் இந்த சம்பவமானது உண்மையைத் திரித்து தூஸ் பிரயோகம் செய்வது போல் உள்ளது உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார்.