வடிவேலு எப்படிப்பட்ட ஆளு தெரியுமா..?” கண்ணீர் விட்ட நடிகை சுமதியின் பேட்டி..!

 

தமிழ் திரையுலகை பொருத்தவரை பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மத்தியில் பேசும் பொருளாக திகழக்கூடிய நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் மிகச்சிறந்த பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சுமதி. 

இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த படங்களில் காமெடி காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த காட்சிகளை இன்று பார்த்தால் கூட ரசிகர்கள் கட்டாயம் சிரிப்பு மழையில் நனைவார்கள் எனக் கூறலாம். 

அந்த அளவு வடிவேலு மற்றும் சுமதியின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பான முறையில் ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களை கட்டாயம் சிரிக்க வைத்து விடும். இந்நிலையில் அண்மையில் நடிகை சுமதி கண்ணீர் மல்க பேட்டி ஒன்றினை கொடுத்திருக்கிறார். 

இந்த பேட்டியில் இவர் பேசும் போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதில் இவரது ஊர் சேலம் என்று கூறியதோடு அந்த சேலத்திற்கு அருகே இருக்கும் அரியாகவுண்டன்பட்டி தான் இவரது சொந்த ஊர் என கூறினார். 

அதுமட்டுமல்லாமல் இவர்களது குடும்பம் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழை குடும்பம். வறுமையால் ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டதாக கூறியிருக்கிறார். தனக்கு திருமணம் ஆன பிறகு வேலையைத் தேடி கணவரும் இவரும் சென்னைக்கு வந்தார்களாம். 

அங்கு வந்த சமயத்தில் இருவருக்கும் வேலை இல்லாத நிலையில்  வீட்டு வாடகையை கூட கொடுக்க கஷ்டப்பட்ட போது அக்கம் பக்கத்தில் வீட்டு வேலைக்கு சென்று வேலை செய்து வெறும் 400 ரூபாய் மாத சம்பளமாக பெற்றதாக கூறினார். 

அப்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அத்தோடு அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் பயமும் இருந்தது. இதனை அடுத்து இவர் படத்துக்காக வாய்ப்புகளைத் தேடிய போது நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் சுமதிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் திரையுலகில் பிரபலமான இவர் வடிவேலு உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். 

நான் சிரமப்பட்ட காலத்தில் ஒரு சல்லி பைசா கூட வடிவேலு கொடுத்து எங்களுக்கு உதவி செய்தது இல்லை என்று கூறி கண்ணீர் வடித்தார். இப்போது இவரது பேட்டியை பரவலாக படித்த ரசிகர்கள் இப்படிப்பட்ட கல் நெஞ்சு காரரா? வடிவேலு என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.