என்னது..? நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிய இந்த ஜஸ் நடிகை தான் காரணமா..?


துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தனது துள்ளலான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் தற்போது தமிழ் திரை உலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழ்கிறார். 

தனது அண்ணன் செல்வராகவன் மூலம் திரை உலகில் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பேரன்பை பெற்றார். 

அடுத்து ரஜினியின் மகளை காதலித்த இவர் அவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தந்தை ஆனார். எனினும் இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். 

அவர்களின் பிரிவுக்கு காரணம் அமலா பால் என்று கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அம்மா கணக்கு என்கின்ற கதையில் அமலாபாலை நடிக்க வைத்து அந்த படத்தை தனுஷ் தயாரிப்பாளராக இருந்தார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதால் தான் அமலா பால் அவர் கணவரான ஏ எல் விஜயை பிரிந்தார் என்று சொல்லப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சமந்தா தனது கணவரை விட்டு பிரிந்தார். எனவே இதற்கும், அதற்கும் முடிச்சு போட்டு பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. எனினும் இது உண்மை இல்லை என்று தெரிந்து விட்டது. 

ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் போது அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இவர் வெற்றிமாறனிடமே சொல்லி இருக்கிறார். 

இதனை அடுத்து இந்த செயல் வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லை. என்றாலும் படத்துக்கு தனுஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் எடிட்டிங் செய்யும் போது அவ்வளவு நெருக்கமான காட்சிகள் வேண்டாம் என சில காட்சிகளை வெற்றிமாறன் வெட்டிவிட்டார். 

ஆனாலும் அந்த படத்தில் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் தான் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நெருங்கி பழகியதாக சொல்லப்படுகிறது. 

இதனை தடுக்க தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பல்வேறு வகைகளில் கண்டித்த போதும் தனுஷ் அதற்கு கட்டுப்படாமல் ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்து தெரிந்து விட்டார் என்ற தகவலை பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் தெரிவித்திருக்கிறார். 


இப்போது இந்த Youtube வீடியோவை பார்த்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படியும் நடந்திருக்குமா என்ற வீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.