விஜய் டிவி இதை மட்டும் தான் செய்யல..!! கதறும் பிரியங்கா..!

 

சன் டிவிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட விஜய் டிவியில் தொகுப்பாளினியாக திகழும் பிரியங்கா தேஷ்பாண்டே வெள்ளித்திரை நடிகைகளுக்கு சமமாக தனக்கு என்று ஓரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். 

சின்னத்திரையில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்வுகளை பார்ப்பதற்கு என்றே அந்த ரசிகர் கூட்டம் காத்திருக்கும் என்று கூறலாம். அந்த அளவு மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவராக பிரியங்கா தேஷ்பாண்டே விளங்குகிறார். 

இவர் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அந்த அளவு மக்கள் இவரை நேசித்தார்களா? என்று தெரியவில்லை. ஆனால் நாள் செல்ல, செல்ல இவருக்கு மக்கள் ஆதரவு பெருகியதோடு இவரது நிகழ்வுகளை பார்ப்பதற்கு என்றே அவர்கள் காத்திருக்கவும் ஆரம்பித்தார்கள். 

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங் நிகழ்ச்சியை சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவு எதார்த்தமாகவும் நிகழ்ச்சி போர் அடிக்காத விதத்தில் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் வல்லவர். 

சின்னத்திரைகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு நின்று விடாமல் தனக்கு என்று சொந்தமாக ஒரு Youtube பக்கத்தை வைத்து, அதில் பல வீடியோக்களை அன்றாடம் வெளியிட்டு அதிக அளவு பார்வையாளர்களை பெற்றிருக்கிறார். 

மேலும் Youtube பக்கத்தில் இவர் அடிக்கடி சூப்பர் சிங்கர் சீனியர் இறுதி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களையும் வழக்கமாக வெளியிட்டு இருக்கிறார். மேலும் விஜய் டிவிக்காக இவர் அதிக அளவு உழைப்பதாக கூறியிருக்கிறார். 

அப்படி அதிக அளவு விஜய் டிவிக்காக உழைக்கக்கூடிய இவரின் சம்பளத்தை அவர்கள் உயர்த்தவே இல்லை என்ற தனது ஆதங்கத்தை பாங்காக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

எனவே இந்த நிலையை தெரிந்து கொண்ட விஜய் டிவி இனியாவது பிரியங்காவின் சம்பளத்தை உயர்த்தி அவரது புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சோகத்தை தீர்க்குமா? என்பதை இனிவரும் நாட்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.