காவிரி பிரச்சனை.. சூர்யா விஜய் இருவரையும் பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்..

 


அண்னைக்காலமாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது என கூறலாம். அந்த வகையில் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் காவிரி பிரச்சனையைப் பற்றி இவர் பகிர்ந்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் வைரல் ஆகிவிட்டது. 

காவிரி பிரச்சனையை மையமாக வைத்து ப்ளூ சட்டை மாறன் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை படு பயங்கரமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார். மேலும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை கொடுக்காமல், கர்நாடக அரசு நடத்திவரும் நாடகங்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என தெரியாத வேளையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடந்தது. 

இதனை அடுத்து குருவை சாகுபடிக்காக 15 நாட்களுக்குள் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும் என கர்நாடக அரசுக்கு கூறப்பட்ட நிலையில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல் இந்த எதிர்ப்புகளை அவர்கள் முழு அடைப்பின் மூலம் உடனே வெளிப்படுத்தியதோடு தமிழ் நடிகரான சித்தார்த் பங்கு பெற்ற நிகழ்ச்சியையும் நடத்த விடாமல் நடிகர் சித்தார்த்தை வெளியேற்றி அந்த நிகழ்வை புறக்கணிக்க செய்தார்கள். 

இதனை அடுத்து கன்னட நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டது, உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். அதுபோலவே சிவராஜ்குமார் இந்த விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்டிருந்தார். 

இதற்கிடையில் கன்னட நடிகர்கள் அனைவரும் காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால் தமிழ் நடிகர்கள் அனைவரும் இந்த பிரச்சினை பற்றி எந்த வித கருத்துகளையும் ஒருமித்த குரலில் வெளிப்படுத்தவில்லை. 

இந்த சூழ்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது twitter பக்கத்தில் காவிரி பிரச்சனையைப் பற்றி பகிர விஜய் தலைவா டைம் டு மீட் என்று குறிப்பிட்டு தலைவா பட போஸ்டரையும், காவிரி பிரச்சனை சூர்யா இதற்கு மட்டும் துணியாதவன் என்று குறிப்பிட்டு துணிந்தவன் பட போஸ்டரையும் பகிர்ந்து சம்பவம் செய்துவிட்டார். இந்த ட்விட் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரப்பி தமிழர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.