"அவங்களோட படுக்க கட்டாயப்படுத்தினாங்க..!" - உண்மையை உடைத்த நடிகை அஞ்சலி..!

 

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சறுக்கல்களை சந்தித்த நடிகை தான் அஞ்சலி இவர் நடித்த படத்தில் இவரை கட்டாயப்படுத்தி நடுரோட்டில் நடிகரோடு படுக்க வேண்டும் என்று தன்னை வற்புறுத்திய இயக்குனர் பற்றிய உண்மையை தற்போது அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். 

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகை அஞ்சலி தமிழில் சில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜெய்யின் மீது காதல் கொண்டார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள். 

மேலும் நடிகர் ஜெயின் குடிப்பழக்கம் அவரை வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இருந்ததின் காரணத்தால் இவரோடு உறவு கொண்டிருந்தால் தன்னுடைய வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்று அவரை விட்டு விலகினார். 

ஜெயுடன் இருந்த காலத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவிற்குள் களம் இறங்கி முந்தைய படங்களில் காட்டாத கவர்ச்சியை காட்டி நடிக்க துவங்கிவிட்டார். இதனை அடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் அங்காடி தெரு படத்தில் தான் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில் கிளைமாக்ஸ் காட்சியில் சாலையில் படுத்திருக்கும் நபர்களோடு சேர்ந்து படுக்க வேண்டும் என்று இயக்குனர் தன்னை வற்புறுத்தி இருக்கிறார் என கூறினார். மேலும் செட் போட்டு எடுக்க கூறிய போதும் அப்படி போட்டு எடுத்தால் அதை இயல்பாக இருக்காது. 

கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் இந்த காட்சி சிறப்பாக வர வேண்டுமென்றால் நடுரோட்டில் நீங்கள் ஹீரோவுடன் படுத்து கொள்வதுதான் சிறப்பாக இருக்கும். மேலும் தத்துரூபமாக அமையும் என வற்புறுத்தி அந்த காட்சிகள் நடிக்க வைத்ததாக கூறியிருக்கிறார்.

 அன்று அந்தக் காட்சியில் நடிக்க மிகுந்த தயக்கத்தோடு நான் அதை செய்தேன். ஆனால் அதை நினைத்து இப்போது வெட்கப்படுகிறேன். ஒரு நடிகை எல்லாவற்றுக்கும் தயாராகவும் தியாகங்களை செய்தால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும் என்பதை தற்போது புரிந்து கொண்டேன் என முதிர்ச்சியோடு பதில் அளித்திருக்கிறார்.