அம்மாவை மிஞ்சிய அழகில் ஊர்வசி மகள் - பலரும் பார்த்திடாத க்யூட் போட்டோஸ்..!

 


என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது நடிகை ஊர்வசி முதல் முதலாக தனது மகளின் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

 இந்த போட்டோக்களை பார்த்ததுமே மனதை கவரக்கூடிய வகையில் கொள்ளை அழகில் அம்மாவை விட ஒரு படி மேலே என்று சொல்லக்கூடிய அளவு வளர்ந்து நிற்கும் ஊர்வசி மகளின் புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஒட்டி விட்டது. 



நடிகை ஊர்வசி கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக மலையாள படங்களில் இவர் நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார். 

தமிழைப் பொறுத்தவரை பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர். 

முந்தானை முடிச்சு படத்திற்கு பிறகு இவர் அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூர்க்கன், நெருப்புகுள் ஈரம், ஓ மானே மானே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 90களில் முன்னணி நடிகையாக இருந்திருக்கும் இவர் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து, பல விருதுகளையும் பெற்று இருக்கிறார். 

சினிமாவில் நடிக்கும் போதே மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை 2000 ஆவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற இவர் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு 46 வயதில் ஒரு ஆண் மகனுக்கு தாயானார்.

இதனை அடுத்து மூத்த மகள் இத்தனை நாளும் அவர் முன்னால் கணவர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது வளர்ந்த காரணத்தால் ஊர்வசியை அவ்வப்போது சந்தித்து செல்கிறார். 

அந்த வகையில் மகள் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தான் இன்ஸ்டாவில் பதிவேற்றி இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 

இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அம்மாவின் சாயலில் மகள் இருப்பதால் இவர் எப்போது கதாநாயகியாக வருவார் என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.