கணினி நாகரிகத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்த உலகம் இன்னும் பெண்கள் விஷயத்தில் அப்படியே உள்ளது என்றுதான் கூற வேண்டும். எவ்வளவு தான் AI தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என தெரியவில்லை.
அந்த வகையில் தற்போது நயன்தாரா படத்தில் நடித்த நடிகையான காயத்ரி ரெமா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டூரிங் டாக்கிஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இதனை அடுத்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் இவர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சில இயக்குனர்கள் இவரை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பதாகவும், அந்த இயக்குனர்களின் பெயரை கூறினால் தனக்கு வரும் பட வாய்ப்புகள் குறைந்து விடும் என கூறியிருக்கிறார்.
எனவே தான் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தை பொறுத்தவரை நான் எவரைப் பற்றியும் வாய் திறப்பதில்லை. தனது கருத்துக்களை தெரிவிப்பதில்லை என்று கூறி இருக்கும் இவர் அந்த விவகாரத்தை தவறாக கூறவில்லை என ஓப்பனாக பேசியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அனைவரும் திடுக்கிட கூடிய வகையில் ஒரு கருத்தினை கூறி இருக்கிறார்.
அது என்னவென்றால் காதலித்த காதலன் பல வகைகளில் டார்ச்சர் செய்கிறார்கள். அது போல கட்டிய கணவரும் டார்ச்சர் செய்ய தயங்குவதில்லை.
இப்படி அவர்களின் டார்சரை தாங்கி வாழ பழக்கியிருக்கும் பெண்கள் இது போல அட்ஜஸ்ட்மெண்ட் செய்யக் கூறும் ஆண்களோடு சென்றால் என்ன தவறு? திரைப்படத்தில் நடித்து பெயர், புகழ் கிடைப்பதோடு நல்ல பணமும் கிடைக்கும்.
எனவே அதைப் பற்றி அந்தப் பெண் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற தடாலடி கருத்தை கூறி சர்ச்சையை கிளப்பிவிட்டார்.
காயத்ரி ரெமா கூறிய கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? இல்லையா? இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்து இந்த பதிவை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.