சென்னையில் பிறந்து வளர்ந்த பிரியங்கா மோகன் இரண்டு மொழிகள் அறிந்தவர். இதற்கு காரணம் இவர் அப்பா தமிழ்நாட்டையும், அம்மா கன்னட தேசத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கு தமிழும், கன்னடமும் மிக நன்றாக தெரியும்.
எனவே தான் இவர் முதலில் ஒரு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் அக்கட தேசத்திற்கு சென்று தெலுங்கு சினிமாவில் வாய்ப்பினை தேடி வந்தார்.
அந்த வகையில் இவர் நானி நடித்த கேங் லீடர் திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து ஸ்ரீ காரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் இயக்குனர் நெல்சன் மூலம் இவருக்கு தமிழ் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் நடிக்கும் போதே சூரியாவோடு துணிந்தவன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த ரோலையும் பக்காவாக செய்தார் எனினும் இந்த படம் பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தரவில்லை.
இவர் நடித்த டாக்டர் படம் ஹிட்டானதை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் படத்தில் நடித்தார். இதனை அடுத்து தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லத் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவரது அழகு காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது இவர் வித்தியாசமான கோணத்தில் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
2 கே கிட்ஸும் விரும்பும்படி இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படமாக மாறிவிட்டது. இந்த புகைப்படத்தில் கண்களால் பேசி இருக்கும் பிரியங்கா மோகன் இடம் என்ன பேசுவது என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது தவிர்த்து வருகிறார்கள்.