தமிழ் திரையுலகில் தனது குணச்சித்திர நடிப்பின் மூலம் பெருவாரியான ரசிகர்களை ஈர்த்த நடிகர் தான் ராஜ்கிரண் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு விநியோகஸ்தராக தான் திரை உலகிற்குள் நுழைந்தார். இவர் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்தாலும் என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்து,
அதில் ஹீரோவாக நடித்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து பல படங்களில் கதாநாயகனாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.
இவரைப் போலவே தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா.
தமிழ் படம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் இவர் நடித்திருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் நடித்த இவர் ரத்தத்தின் ரத்தமே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இவரது நடிப்பில் தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசா தான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, கங்கா கௌரி உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கவர்ச்சியை நம்பாமல் நடிப்பை மட்டும் பெரிதும் நம்பியவர் டீசன்டான உடைகளை அணிந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவர் பூவே உனக்காக படத்தில் கேமரா மேன் ஆக இருந்தவரை திருமணம் செய்து கொண்டு தற்போது பிள்ளை குட்டி என கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் இவர் ஊடகம் ஒன்றில் பேசியபோது எல்லாமே என் ராசாதான் படத்தில் ராஜ்கிரணுக்கு நடிக்க ஒப்பந்தமான சமயத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்ததாகவும் அந்த சமயத்தில் ராஜ்கிரண் பார்ப்பதற்கு மிகப்பெரிய தோற்றத்தில் காட்சி அளித்திருக்கிறார்.
இவருக்கு ஏற்ற வகையில் நான் உடல் எடை அதிகமாக போட வேண்டும் என்று கூறியதோடு, அதன் பிறகு தான் படப்பிடிக்கும் துவங்கும் என்று உறுதியாக இருந்தார்.
மேலும் ராஜ்கிரண் அலுவலகத்தில் இருந்து வரும் உணவுகளை கட்டாயம் சாப்பிடக்கூடிய சூழ்நிலையை எனக்கு உருவாக்கி விட்டார். அம்மா சொன்னாலே நான் சரியாக உணவை சாப்பிட மாட்டேன்.
ஆனால் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக சின்ன பொண்ணு என்று கூட பார்க்காமல் ராஜ்கிரண் செய்த இந்த சாப்பாட்டு கொடுமை விஷயத்தை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை.
இந்த திரைப்படமானது கிராமப்புறங்களில் இருக்கும் மக்களிடம் கூட என் பெயரைக் கொண்டு சேர்த்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தி தந்தது.