நடிகை ஸ்ரீதேவியின் மர்ம மரணம் - விசாரணையில் ரகசியம் உடைத்த கணவர் போனி கபூர்..!

 

நம்ம ஊரு மயிலு ஸ்ரீதேவி இறந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் அவர் மரணத்தில் மர்மம் உள்ளதாக பலரும் பல வகையில் பேசி வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் சென்றபோது ஹோட்டலில் இருந்த பாத் டப்பில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கிறார். இதனை அடுத்து நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அவரை கொன்று விட்டதாக பல வகைகளில் செய்திகள் பரவியதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவியின் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கப்பட்டது. 

இதனை அடுத்து தற்போது ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தனது மனைவியின் மரணம் குறித்து முதல் முறையாக தனது கருத்தை கூறி இருக்கிறார். அதில் அவர் தனது அன்பு மனைவியை நானே கொன்று விட்டேன் என பலரும் மனசாட்சி இல்லாமல் பேசி இருப்பதாகவும் ஏன் துபாய் அரசாங்கம் கூட அந்த எண்ணத்தில் தன்னிடம் 48 மணி நேரம் அளவு விசாரணை நடத்தி இருக்கிறார்கள் என்ற நிலையை தெளிவு படுத்தினார். 

மேலும் இது திட்டமிட்ட கொலை அல்ல தற்செயலாக ஏற்பட்ட விபத்து தான் இதற்கு காரணம் ஸ்ரீதேவிக்கு லோ பிபி எழுந்ததின் காரணத்தால் அடிக்கடி அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் பல நாட்கள் இருந்ததாக கூறியிருக்கிறார். 

இந்த லோ பிபி காரணத்தினால் தான் ஸ்ரீதேவி வாட்ஸ் அப்பில் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார் மருத்துவர்கள் பலமுறை அட்வைஸ் செய்த போதும் அவர் சரியான டயட்டை பாலோ செய்யவில்லை என்ற உண்மையை தற்போது வெட்ட வெளிச்சமாக கூறிவிட்டார்.